நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கர்பாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்

லண்டன்:

இங்கிலாந்து கர்பாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றுக்கு மென்செஸ்டர் சிட்டி அணியினர்  முன்னேறி உள்ளனர்.

எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வாட்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வாட்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை ஜெராமி டோஃகு, மேத்தியூஸ் நூனாஸ் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியின் கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 5-0 என்ற கோல் பாரோவ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்ற ஆட்டங்களில் அஸ்டன்வில்லா, லெய்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset