நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியப் பவுலிங் காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் பி.எஸ் நாதன் காலமானார்

கோலாலம்பூர்: 

மலேசியப் பவுலிங் காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் பி.எஸ் நாதன் தனது 90-ஆவது வயதில் நேற்று மாலை காலமானார்.

இவரின் மறைவை மலேசியப் பவுலிங் காங்கிரஸ் உறுதிப்படுத்தியது.

டத்தோ டாக்டர் பி.எஸ் நாதனின் மறைவு  பவுலிங் விளையாட்டுத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்று மலேசியப் பவுலிங் காங்கிரஸ் தெரிவித்தது. 

பவுலிங் விளையாட்டுத் துறைக்கு டத்தோ டாக்டர் பி.எஸ் நாதன் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் பணியாற்றியுள்ளார். 

பவுலிங் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவை உலகளவில் மிளிர அவர் கடினமாக உழைத்தார். 

அவரிடமிருந்து பலர் பவுலிங் பயிற்சியைப் பெற்று இன்று நாட்டைப் பிரதிநித்து உலகளவில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

உள்ளூர் மற்றும் உலக அரங்கில் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று  மலேசியப் பவுலிங் காங்கிரஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. 

கடந்த 1974-ஆம் ஆண்டு  டத்தோ டாக்டர் பி.எஸ் நாதன் மலேசியப் பவுலிங் காங்கிரஸைத் தோற்றுவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset