நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அஸ்டன் வில்லா அணியின் 41 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துக் குழுவான அஸ்டன் வில்லா, 41 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்றது.

41 ஆண்டு ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் இப்பருவத்தின் சாம்பிய்ன்ஸ் லீக் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் யங் பாய்ஸ் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது அஸ்டன் வில்லா. 

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அஸ்டன் வில்லாவின் முன்னாள் தாக்குதல் ஆட்டக்காரர் கேரி ‌ஷோ உயிரிழந்தார்.

 63 வயதான அவர், கீழே விழுந்து காயமுற்றதால் மரணமடைந்தார்.

‌ஷோக்கு மரியாதை செலுத்தும் வகையில் யங் பாய்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுமாறு வில்லா நிர்வாகி யுனேய் எமரி தனது அணியை ஊக்குவித்தார்.

‌1982ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி இறுதியாட்டத்தில் வில்லா, ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கை வென்று கிண்ணத்தை வென்றது. அந்தக் குழுவில் முக்கிய வீரராக இருந்தவர் ‌ஷோ.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset