செய்திகள் வணிகம்
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்தியா கேட் உணவகம் 10ஆவது கிளை திறப்பு
பெட்டாலிங் ஜெயா:
மலேசியாவின் புகழ்பெற்ற இந்திய உணவக சங்கிலியான இந்தியா கேட், தனது 10ஆவது கிளையை வியப்பூட்டும் முறையில் திறந்து வைத்தது.
இது உணவக வரலாற்றில் முக்கியமான மைல்கல், ஏனெனில் இந்த உணவகம், ஒரே ஆண்டில் அதிகளவிலான ரொட்டி நான், மற்றும் பிரியாணி விற்றதற்காக மலேசிய சாதனை புத்தகத்தில் புகழ் பெற்றுள்ளது.
திறப்பு விழாவை மேலும் சிறப்பிக்க, உரிமையாளர் சரவணனின் தாயார் நெகிழ்ச்சியுடன் ரிப்பன் வெட்டி கிளையை திறந்தார். இந்நிகழ்வை கொண்டாடும் விதமாக 1000 பேருக்கு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டன.
அன்றைய தினம் மக்கள் கூட்டம் அலைமோதியது, உணவகத்தின் புகழ் வெற்றிகரமாக வளர்ந்ததைப் பிரதிபலிக்கிறது. வரிசையில் காத்திருந்த மக்கள், இந்த நிகழ்வை உல்லாசமாகக் கொண்டாட, இந்தியா கேட் உணவகத்தின் மேன்மையான சுவைகளுக்கு மகத்தான ஆதரவை வழங்கினர்.
தமது சாதனையை முன்னிட்டு உரிமையாளர் சரவணன் , "இந்த வெற்றியின் பின்புலம் அனைத்துப் பணியாளர்களின் கடின உழைப்பும், எங்களின் வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவுமே," என்று குறிப்பிட்டு, அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்கினார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 5:15 pm
வெளிநாடுகளில் இருந்து வாகனங்ளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு மீண்டும் அனுமதி
September 14, 2024, 10:49 am
தொழிற்சாலையை மூடிவிட்டு 100 ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்த சமூக ஊடகப் பிரபலம், கைருல் அமிங்
September 12, 2024, 12:36 pm
Samsung Electronics நிறுவனம் ஆட்குறைப்பு
September 9, 2024, 1:02 pm
99 ஸ்பீட் மார்ட் தென்கிழக்கு ஆசியா சந்தையிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்த திட்டம்
September 8, 2024, 4:50 pm
சிங்கப்பூர் - மெல்பர்ன் விமானச் சேவையை நிறுத்தவிருக்கும் எமிரேட்ஸ்
September 1, 2024, 1:51 pm
ஏர் இந்தியாவின் 25 சதவீதம் பங்கை வாங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
August 28, 2024, 6:39 pm
பங்சாரில் பிரம்மாண்டமாக திறப்பு விழா கண்டது MOSIN SIGNATURE உணவகம்
August 27, 2024, 5:30 pm