
செய்திகள் வணிகம்
99 ஸ்பீட் மார்ட் தென்கிழக்கு ஆசியா சந்தையிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்த திட்டம்
கோலாலம்பூர்:
முதல் முறையாகப் பங்குச் சந்தையில் இடம்பெற்ற 99 ஸ்பீட் மார்ட் வாய்ப்பு இருந்தால் தென்கிழக்கு ஆசியா சந்தையிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்த திட்டம் கொண்டுள்ளது என்று 99 ஸ்பீட் மார்ட்டின் செயல்முறை இயக்குனர் ஆல்பர்ட் லீ தெரிவித்தார்.
தற்போது தென்கிழக்கு ஆசியா சந்தையிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்த வலுவான திட்டமிடல் இல்லையென்றாலும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அதற்கான நடவடிக்கையில் தனது தரப்பு முழு வீச்சில் செயல்படும் என்றார் அவர்.
99 ஸ்பீட்மார்ட் தொடக்க நேரத்தில் ஒரு பங்கிற்கு RM1.85 என்ற விலையில் வர்த்தகம் செய்தபோது வலுவான தோற்றத்தை ஏற்படுத்தியது.
வர்த்தகத்தில் மொத்தம் 53.8 மில்லியன் பங்குகள் கை மாறியது.
99 ஸ்பீட்மார்ட்டின் ஐபிஓவில் ஏற்கனவே உள்ள 1.028 பில்லியன் சாதாரண பங்குகளின் விற்பனை மற்றும் 400 மில்லியன் புதிய பங்குகளின் பொது வெளியீட்டில் RM660 மில்லியன் நிதி பெறப்பட்டுள்ளது.
ஸ்பீட் மார்ட்டின் IPO, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாளர்கள் உட்பட 14 முக்கிய முதலீட்டாளர்களால் ஆதரிக்கப்பட்டது.
இதற்கிடையில்,கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட அதன் ஆன்லைன் மொத்த விற்பனை தளமான 99BulkSales ஐ வலுப்படுத்த விரும்புவதாக என்று தோற்றுனர் லீ கூறினார்.
ஸ்பீட் மார்ட் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த பிரிவில் நல்ல வளர்ச்சியைக் கண்டதாகவும், அதன் காரணமாக நிறுவனம் அதை மத்திய பிராந்தியத்திலும் பின்னர் தெற்கிலும் அறிமுகப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm