நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் பாடகர் மலேசியா வாசுதேவன் குரல்

சென்னை:

ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள  மனசிலாயோ என்ற பாடல் முன்னோட்டத்தை வெளியிட்ட படக்குழுவினர், 

ஏ.ஐ தொழில் நுட்பத்தின் மூலம் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் மீண்டும் ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் தற்போது  மனசிலாயோ பாடலின் முன்னோட்ட வீடியோவில் மிகப்பெரிய சிறப்பு ஒன்றினை அனிருத் வைத்துள்ளார்.

அதாவது ஜாம்பவான் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலமாக அனிருத் கொண்டு வந்துள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி  வாசுதேவன் இறந்த நிலையில்,

கிட்டதட்ட 27 வருடங்களுக்குப் பிறகு மலேசியா வாசுதேவன் வேட்டையன் படத்தில் பாடியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset