நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாடகர்கள் ஷீஸே, ஹஸ்மித்தா கூட்டணியில் உருவான 'போதும்' பாடலின் காணொலி யூ ட்யூப்பில் வெளியானது 

கோலாலம்பூர்: 

நாட்டின் இரு முன்னணிக் கலைஞர்களான ஷீஸே, ஹஸ்மித்தா அவர்களின் கூட்டணியில் உருவான போதும் FIRST SINGLES பாடல் வெள்ளிக்கிழமை யூட்யூப்பில் மாலை 4 மணிக்கு வெளியானது. போதும் பாடலை SHEEZAY, LINGGES இருவரும் இசையமைத்தனர். 

முன்னணி பாடகர்களாக வலம் வரும் ஹஸ்மித்தா, SHEEZAY இருவரும் இணைந்து இந்த போதும் பாடலைப் பாடியுள்ளனர். 
காதலில் உள்ள கசப்புகளினால் ஏற்படும் பிரிவுகள் மற்றும் காதலில் உள்ள சிக்கல்களில் மீண்டு வந்து போதும் என்று சொல்லும் அளவிற்கு இருவரும் தள்ளப்பட்டுள்ளனர் எனும் கருப்பொருளை மையமாக வைத்து போதும் பாடல் அமைக்கப்பட்டதாக பாடகர் ஹஸ்மித்தா கூறினார். 

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளும் இணைந்து இந்த பாடலின் வரிகள் அமைக்கப்பட்டது. இப்ராஹிம் நெல்சன் 'போதும்' பாடலை இயக்கியுள்ளார். 

மலேசியா மட்டுமல்லாமல் அனைத்துலக இந்திய மக்களைக் கவர்வதற்காக இந்த பாடல் SONY MUSIC MALAYSIA, XENO MUSIC ஆகிய தரப்புகளுடன் ஒத்துழைப்பு நல்கப்பட்டது.. 

'போதும்' பாடல் மூன்று நிமிடங்கள் 14 வினாடிகள் ஒளியேறியது. இப்போது இந்த பாடல் அனைத்து இலக்கவியல் தளத்தில் ரசிகர்கள் கேட்டு மகிழலாம். 

முன்னதாக, டமான்சாராவில் உள்ள தி பெங்கல்ஸ் கஃபேவில் நடைபெற்ற இசை பாடல் அறிமுக நிகழ்ச்சியில் 50 பேர் கலந்து சிறப்பித்தனர். ராகா வானொலி அறிவிப்பாளர் கோகுலன் நிகழ்ச்சியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset