நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

 நடுவானில் தள்ளாடிய Scoot விமானம்: 7 பேர் காயம் 

சிங்கப்பூர்:

Scoot விமானம் ஒன்று நடுவானில் தள்ளாடி ஆட்டங்கண்டதில் 7 பேர் காயமடைந்தனர்.

சிங்கப்பூரில் இருந்து சீனாவின் குவாங்சோ (Guangzhou) நகருக்கு நேற்று காலை (6 செப்டம்பர்) பறந்து கொண்டிருந்தபோது விமானம் கடுமையாக ஆடியது.

விமானம் சிங்கப்பூரில் இருந்து காலை சுமார் 5.45 மணிக்குப் புறப்பட்டு, குவாங்சோ நகரில் காலை 9.10 மணியளவில் தரையிறங்கியது.

காயமடைந்த 4 பயணிகளுக்கும் 3 விமான ஊழியர்களுக்கும் உடனடி மருத்துவ கவனிப்பு வழங்கப்பட்டதாக Scoot நிறுவனம் தெரிவித்தது.

நேற்றிரவு 8.30 மணி நிலவரப்படி அவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் கூடுதல் பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவும் உதவியும் வழங்கப்படும் என்று Scoot கூறியது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset