நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

யெச்சூரியைப்போல் எந்ததெந்தத் தலைவர்கள் மருத்துவ ஆய்வுக்காக உடல் தானம் செய்துள்ளனர் தெரியுமா?

புது டெல்லி:

உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் எச்சூரியின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.

இதேபோல் முன்பும் பல்வேறு இடதுசாரி தலைவர்களின் உடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

மேற்கு வங்க முதல்வராக 34 ஆண்டுகள் இருந்த ஜோதி பாசு  உடலை தானம் செய்வதாக கடந்த 2003-இல் அறிவித்தார்.

அதன்படி 2010இல் அவரது மறைவுக்குப் பிறகு கொல்கத்தாவின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.

முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் உடல்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset