செய்திகள் வணிகம்
ஏர் இந்தியாவின் 25 சதவீதம் பங்கை வாங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
புது டெல்லி:
இந்திய அரசாங்கத்திடம் இருந்து டாடா குழுமம் வாங்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.2,058.5 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.
இதன் மூலம் ஏர் இந்தியா குழுமத்தில் 25.1 சதவீதப் பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமாகியுள்ளன.
மேலும், ஏர் இந்தியா- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து நடத்தி வந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியா குழுமத்துடன் இணைக்கப்படுகிறது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விஸ்தாரா நிறுவனத்தின் இயக்கம் வரும் நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.2,058.5 கோடி முதலீடு செய்வது உலக அளவில் மிகப்பெரிய விமான நிறுவன முதலீடுகளாக கருதப்படுகிறது.
ஏர் இந்தியாவும், விஸ்டாராவும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
