
செய்திகள் வணிகம்
ஏர் இந்தியாவின் 25 சதவீதம் பங்கை வாங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
புது டெல்லி:
இந்திய அரசாங்கத்திடம் இருந்து டாடா குழுமம் வாங்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.2,058.5 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.
இதன் மூலம் ஏர் இந்தியா குழுமத்தில் 25.1 சதவீதப் பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமாகியுள்ளன.
மேலும், ஏர் இந்தியா- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து நடத்தி வந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியா குழுமத்துடன் இணைக்கப்படுகிறது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விஸ்தாரா நிறுவனத்தின் இயக்கம் வரும் நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.2,058.5 கோடி முதலீடு செய்வது உலக அளவில் மிகப்பெரிய விமான நிறுவன முதலீடுகளாக கருதப்படுகிறது.
ஏர் இந்தியாவும், விஸ்டாராவும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm