செய்திகள் வணிகம்
ஏர் இந்தியாவின் 25 சதவீதம் பங்கை வாங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
புது டெல்லி:
இந்திய அரசாங்கத்திடம் இருந்து டாடா குழுமம் வாங்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.2,058.5 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.
இதன் மூலம் ஏர் இந்தியா குழுமத்தில் 25.1 சதவீதப் பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமாகியுள்ளன.
மேலும், ஏர் இந்தியா- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து நடத்தி வந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியா குழுமத்துடன் இணைக்கப்படுகிறது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விஸ்தாரா நிறுவனத்தின் இயக்கம் வரும் நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.2,058.5 கோடி முதலீடு செய்வது உலக அளவில் மிகப்பெரிய விமான நிறுவன முதலீடுகளாக கருதப்படுகிறது.
ஏர் இந்தியாவும், விஸ்டாராவும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 11:34 am
ஓய்வூதியச் சேமிப்பை இரட்டிப்பாக்க வழிமுறைகள்: நிபுணர்களின் ஆலோசனை
March 22, 2026, 5:35 pm
40 டிகிரி செல்சியஸ் வெப்பம்: கெடா மாநிலத்தில் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது
March 22, 2026, 11:25 am
வீட்டிலிருந்தே ஐந்து இலக்க வருமானம் ஈட்டும் இல்லத்தரசியின் சாதனை
March 22, 2026, 11:00 am
தங்க விலையின் வீழ்ச்சி நீடிக்காது: ஸ்டீபன் இன்னெஸ் அறிவிப்பு
March 19, 2026, 11:08 am
உயரும் எண்ணெய் விலை: டிரம்பின் 60 நாள் ஜோன்ஸ் சட்டம் விலக்கு
March 18, 2026, 6:03 pm
சிங்கப்பூர் டாலர் முன்னிலையில் உயர்ந்த ரிங்கிட்
March 18, 2026, 12:39 pm
பொருளாதார வளர்ச்சியில் தபுங் ஹாஜி நிறுவனம்; 3.50 சதவீத லாபப்பகிர்வுடன் சாதனை
March 13, 2026, 12:42 pm
