
செய்திகள் வணிகம்
மலேசியாவின் ஏற்றுமதி 18.4 விழுக்காடு அதிகரித்தது: புள்ளிவிவரத்துறை தகவல்
கோலாலம்பூர்:
மலேசியாவின் ஏற்றுமதி அளவானது கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்றம் கண்டுள்ளது. சுமார் 18.4 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் துறை தெரிவித்துள்ளது.
அதாவது 95.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் ஏற்றுமதிகள் ஏற்றம் கண்டுள்ளதாக அத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது உஸிர் மஹிதீன் (Mohd Uzir Mahidin) கூறினார்.
ஏற்றுமதி தொடர்பில் பதிவாகி உள்ள இந்த இரு இலக்க வளர்ச்சிக்கு உள்நாட்டு ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதியின் ஆதரவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“மொத்த ஏற்றுமதியில், உள்நாட்டு ஏற்றுமதியானது 79.1 பில்லியன் ரிங்கிட்டாக, அதாவது 82.7 விழுக்காடு பங்களிப்பை செய்துள்ளது. இதேபோல் மறு ஏற்றுமதியானது 16.7 விழுக்காடு பங்களிப்புடன் 16.5 பில்லியனாக உள்ளது.
"இதற்கிடையே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆகஸ்ட் மாதம் இறக்குமதி அளவு சுமார் 12.5 விழுக்காடு அதிகரித்து 74.2 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது.
"சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இந்தோனீசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, சீனாவுக்கு அதிக அளவிலான பொருள்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இதன் காரணமாக ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதியானது 18.4 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது," என்றார் முஹம்மது உஸிர் மஹிதீன்.
உலகளவில் பொருளியல் மந்தச் சூழ்நிலை காணப்படும் வேளையில், ஏற்றுமதி அளவு அதிகரித்திருப்பது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm