
செய்திகள் இந்தியா
ஞானவாபி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் நடந்து செல்வதற்கு தடைகோரி மனு: 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வாரணாசி:
உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலின் கீழ் உள்ள மீது முஸ்லிம்கள் நடந்து செல்வதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி பள்ளிவாசல் உள்ளது. அவரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறி அதை மீண்டும் கோயிலாக அறிவிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஹிந்து தெய்வங்களுக்கு பூஜை செய்ய நீதிமன்றம் முன்பே அனுமதி அளித்தது.
பள்ளிவாசலில் நடந்து செல்வதால் கோயிலின் மேற்கூரை பலவீனமாக உள்ளதால் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் நடக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஹிந்துக்கள் தரப்பு வாதத்தை சனிக்கிழமை கேட்ட மாவட்ட நீதிபதி சஞ்சீவ் பாண்டே, அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 17 ஒத்திவைத்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
September 9, 2025, 1:31 pm
விமான பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திருடிய 15 அதிகாரிகள் நீக்கம்
September 9, 2025, 7:12 am
இன்று இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
September 8, 2025, 6:13 pm
அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தை மோடி தவிர்ப்பு
September 8, 2025, 1:23 pm