செய்திகள் இந்தியா
ஞானவாபி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் நடந்து செல்வதற்கு தடைகோரி மனு: 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வாரணாசி:
உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலின் கீழ் உள்ள மீது முஸ்லிம்கள் நடந்து செல்வதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி பள்ளிவாசல் உள்ளது. அவரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறி அதை மீண்டும் கோயிலாக அறிவிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஹிந்து தெய்வங்களுக்கு பூஜை செய்ய நீதிமன்றம் முன்பே அனுமதி அளித்தது.
பள்ளிவாசலில் நடந்து செல்வதால் கோயிலின் மேற்கூரை பலவீனமாக உள்ளதால் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் நடக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஹிந்துக்கள் தரப்பு வாதத்தை சனிக்கிழமை கேட்ட மாவட்ட நீதிபதி சஞ்சீவ் பாண்டே, அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 17 ஒத்திவைத்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
