நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரள மாநிலத்தின் வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு: 400 குடும்பங்கள் பாதிப்பு, 7 பேர் உயிரிழப்பு 

திருவனந்தபுரம்: 

கேரள மாநிலத்தின் வயநாட்டில் தொடர் கனமழையால் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மீட்புக்குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து நிலச்சரிவு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset