நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெளிநாட்டில் முதல் முறையாக இந்தியாவின் ஜன்ரிக் மருந்து கடைகளான 'மக்கள் மருந்தகம்' திறப்பு

புது டெல்லி:

இந்தியாவில் உள்ள ஜன்ரிக் மருந்து கடைகளான மக்கள் மருந்தகம் முதல் முறையாக வெளிநாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

மோரிஷியசில் இந்த மக்கள் மருந்தகத்தை  அந்நாட்டு பிரதமர்  பிரவிந்த் குமார் ஜகநாத் உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

இந்தியா -மோரிஷியல் இடையிலான ஒத்துழைப்புக்கு இது எடுத்துகாட்டாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

2015இல் தொடங்கப்பட்ட இத் திட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் உள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset