
செய்திகள் விளையாட்டு
ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பாரிஸ் நகரின் மத்திய பகுதிக்குள் நுழைய வாகனங்களுக்குத் தடை
லண்டன்:
பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள செயின் ஆற்றில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமடைந்துள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வாரம் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்றன.
அதற்காகப் பாரிஸ் நகரின் மத்தியப் பகுதியை அதிகாரிகள் மூடத் தொடங்கியுள்ளனர்.
அடுத்த வாரம் வியாழக்கிழமை காலை 5 மணிக்கு ஆற்றோரத்தில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுப்பு நடைபெறும்.
அதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் நுழைய அனுமதியில்லை.
மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படும்.
"grey zone" எனும் உயர் பாதுகாப்புமிக்க பகுதிக்கு நுழைய விரும்பும் குடியிருப்பாளர்கள், சுற்றுப்பயணிகள் அல்லது ஹோட்டல் விருந்தினர்கள் QR குறியீடு கொண்ட அனுமதி அட்டைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
தொடக்க விழாவுக்கு 10 மில்லியன் பார்வையாளர்கள் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக AFP கூறுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am