
செய்திகள் வணிகம்
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
திருச்சி:
திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சேவைகளை இயக்க பாத்தேக் ஏர் விமான நிறுவனம் முன்வந்துள்ளது.
இதனால் திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் சென்னையை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது.
பாத்தேக் ஏர் நிறுவனம் திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு தற்போது விமான சேவைகளை தினசரி வழங்கி வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் விமானம் பயணிகளில் கூட்டம் நிரம்பி செல்வதால் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மலேசியாவிற்கான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அதிகரிப்பதால் விரைவில் மலேசியாவின் பாத்தேக் ஏர் விமான நிறுவனம் கோலாலம்பூர், திருச்சிக்கு இடையே தனது விமான சேவைகளை தினசரி 2 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த வழித்தடத்தில் தினசரி ஒரு விமான சேவையானது திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm