
செய்திகள் மலேசியா
பொறுப்பில் இருப்பவர்கள் தான் கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும்: டத்தோ நெல்சன்
கோலாலம்பூர்:
பொறுப்பில் இருப்பவர்கள் தான் கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் மஇகா அல்ல என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் கூறினார்.
கின்றாரா தமிழ்பள்ளி பிரச்சினை குறித்து மஇகா தான் ஆரம்பத்தில் கேள்வி எழுப்பியது.
ஆனால் இப்போது அந்த விவகாரத்தில் பொறுப்பில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டுள்ளனர்
அவர்கள் நினைத்தால் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டுவிடலாம்.
ஆக அங்கு சென்று பத்தோடு பதினொன்றாக குரல் கொடுக்க மஇகாவுக்கு விருப்பமில்லை.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டாலும் மஇகாதான் செய்தது என்று யாரும் சொல்லவும் மாட்டார்கள்.
மேலும் இணைய பகடிவதைக்கு இலக்கான ஈஷா மரணமடைந்த விவகாரம் மஇகாவுக்கு வேதனையளிக்கிறது.
இன்னும்கூட நாம் மாறவில்லை என்றால் இந்த பகடிவதையை ஒழிக்க முடியாது.
காரணம் இணைய பகடிவதையில் யாரும் சிக்கக் கூடாது என மஇகாவே பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டது.
இருந்தாலும் பிள்ளைகளும் பெற்றோர்களும் இன்னும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக உள்ளனர் என்று டத்தோ நெல்சன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm
முதலை தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்
September 18, 2025, 11:58 am