நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி பேருந்து ஓட்டுநர்களின் மூன்று கோரிக்கைகளை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வர வேண்டும்: ராமதாஸ்

ஈப்போ:

பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் பல ஆண்டு காலமாக முன் வைத்து வரும் மூன்று கோரிக்களை அரசாங்கம் அமலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.

பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் இதனை கேட்டுக் கொண்டனர்.

பள்ளி பேருந்து ஒட்டுநர்கள் கடந்த காலங்களைப் போல்  வருமானத்தை ஈட்ட முடியவில்லை.

குறைந்த வருமானத்தைக்கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

தங்களின் வருமானத்தை ஈட்ட விடு முறைகள் காலங்களில் பள்ளி பேருந்துகளில் சுற்றுப் பயணிகளை  ஏற்ற அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும்.

ஈப்போ இந்தியர் பள்ளி பேருந்து சங்கத் தலைவர் ராமதாஸ் கோவிந்தசாமி இக்கோரிக்கை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை மீண்டும் அமலாக்கத்திற்கு கொண்டு வர அரசாங்கம் பரிசிலிக்க வேண்டும்.

ஆண்டு தோறும்  ஜனவரி 3 ஆம் தேதி  நாடு முழுவதிலும் அந்தந்த மாநிலங்களில் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் ஒன்று கூடும் நிகழ்வை நடத்தி வருவது வழக்கம் .

அந்த வகையில் ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா மண்ட வளாகத்தில் ஒன்று கூடிய பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் சந்திப்புக்குப் பின்னர் இதனை தெரிவித்தார்.

பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் பள்ளி பேருந்துகள் 30 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அரசாங்கத்தின்  அறிவித்துள்ளது.

அதனை 35 ஆண்டு காலமாக  மற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்

இதனிடையே நவம்பர், டிசம்பர் மாதங்களில் பள்ளி விடுமுறை காலங்களில்  பள்ளி பேருந்து ஓட்டுனரலகள எந்த வருமானம் இன்றி இருந்து வரும் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு சிறப்பு  மானியம் வழங்க ஆவன செய்யவேண்டும் என்று மூன்றாவது கோரிக்கை முன்வைத்தார்.

எங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த பிரச்ச னையும் இல்லை இருந்தபோதும் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் முன் வைத்துள்ள இந்த கோரிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset