செய்திகள் மலேசியா
பிரதமர் எப்போதும் இந்திய சமூகத்தின் வெற்றி, முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பார்: டத்தோ ரமணன்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போதும் இந்திய சமூகத்தின் வெற்றி, முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் இதனை கூறினார்.
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை கையாள்வதில் அரசாங்கம் மிகவும் சீரான கொள்கை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் நமது அரசு இந்தியர்கள் தொடர்பான அனைத்து திட்டங்களின் வெற்றி, முன்னேற்றத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது.
இந்தியர்கள் தொடர்பான அனைத்து திட்டங்களும் அதிகாரம், கூடுதல் மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்.
இதன் அடிப்படையில் தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் கூடுதலாக 30 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட், பேங்க் ரக்யாத் பிரிவ்-ஐ திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்காக மொத்தம் 130 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை தெக்குனில் கீழ் எந்தவொரு கூடுதல் நிதியும் ஒடுக்கப்படவில்லை.
ஆனால் கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு ஒற்றுமை அரசும், பிரதமரும் மட்டுமே அக்கறை காட்டி, அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இதனை யாரும் மறுக்க முடியாது என்று டத்தோ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am