செய்திகள் இந்தியா
2019-இல் வெளியான என்ஆர்சி இறுதியானது: வெளிநாட்டினர் தீர்ப்பாயம்
குவாஹாட்டி:
கடந்த 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இறுதியானது என்று அஸ்ஸாமில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இதை இந்திய பதிவாளர் இயக்குநரகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அஸ்ஸாமில் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2018}ஆம் ஆண்டில் வெளியான அதன் வரைவுப் பட்டியலில் சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியான இறுதிப் பட்டியலில் 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். பதிவேட்டில் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பித்திருந்த 3.3 கோடி பேரில் 3.11 கோடி நபர்களின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றன.

எனினும், குடிமக்களைக் கணக்கிடும் விவகாரத்தில் குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இறுதிப் பட்டியல் மறுஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான நடைமுறைகள் தொடங்கப்படவில்லை. என்ஆர்சி இறுதிப் பட்டியலை மறுகணக்கீடு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் சிங்கா என்பவர் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த வெளிநாட்டினர் தீர்ப்பாயம் தனது உத்தரவில் "சம்பந்தப்பட்ட நபரின் பெயர் என்ஆர்சி இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், அவர் இந்திய குடிமகனாகவே கருதப்படுவார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ஆர்சி இறுதிப் பட்டியல் கடந்த 2019}ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் சுமார் 19 லட்சம் பேர் விடுபட்டிருப்பதால் அப்பட்டியல்தான் இறுதியானதா என்பது குறித்து இந்திய பதிவாளர் இயக்குநரகம் இன்னும் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
