
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானப் பயணிகள் சென்னையில் தவிப்பு
சென்னை:
தொழில்நுட்ப கோளாறால் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் தவித்தனர். சென்னை – சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்படுவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, இன்று அதிகாலை 1.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால் விமானத்தில் ஏற 186 பயணிகள் தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அனைத்து பயணிகளும் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக காத்து இருந்த பயணிகள், அவ்வப்போது விமான அதிகாரிகளிடம் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, இன்று காலையில் சரி செய்யப்பட்ட பின்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm