
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானப் பயணிகள் சென்னையில் தவிப்பு
சென்னை:
தொழில்நுட்ப கோளாறால் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் தவித்தனர். சென்னை – சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்படுவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, இன்று அதிகாலை 1.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால் விமானத்தில் ஏற 186 பயணிகள் தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அனைத்து பயணிகளும் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக காத்து இருந்த பயணிகள், அவ்வப்போது விமான அதிகாரிகளிடம் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, இன்று காலையில் சரி செய்யப்பட்ட பின்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm
ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?: அஜித் குமார் விளக்கம்
October 5, 2025, 4:48 pm
இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: மருத்துவர் கைது
October 4, 2025, 9:36 pm
விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன்
October 4, 2025, 8:05 pm
"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம் போடுகிறது”: சீமான்
October 4, 2025, 12:03 pm
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
October 4, 2025, 11:31 am