செய்திகள் மலேசியா
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
சிரம்பான்:
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமைகளை பற்றி இந்திய சமூகம் எந்தவொரு சூழ்நிலையிலும் பொறாமைப்பட்டது இல்லை.
மாறாக சொந்த காலில் நின்று வெற்றிக்காக அச்சமூகம் போராடுகிறது என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் கூறினார்.
தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் பூமிபுத்ராகளுக்கு வழங்கப்படும் சிறப்பு உரிமையை பற்றி இந்திய சமூகம் பொறாமைப்பட வேண்டாம் என கூறினார்.
அந்த பேட்டி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இடம் பெற்றது. அதில் பல நல்ல விஷயங்களைப் பற்றி அவர் பேசினார்.
அதையெல்லாம் விட்டுவிட்டு பொறாமைப்படுகிறார்கள் என்ற வார்த்தையை மட்டும் அனைவரும் பேசுகின்றனர்.
என்னை பொருத்தவரையில் பிரதமரின் பேச்சு குறித்து கருத்துரைக்கைவோ மறுக்கவோ விரும்பவில்லை.
ஆனால் நாட்டில் வாழும் இந்திய சமூகம் மற்ற சமூகங்களின் சிறப்பு உரிமைகளை கண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறாமைப்பட்டது இல்லை.
அதே வேளையில் சொந்தக் காலில் நின்று தான் வாழ்க்கையில வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதை யாராலும் மறுக்க முடியாது என்று பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm