நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் சமூக நல உதவிகளுக்காக மித்ராவில் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும்: பிரபாகரன்

சிரம்பான் -
இந்திய சமுதாயத்தின் சமூக நல உதவிகளுக்காக மித்ராவில் தனியாக 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும்.

மித்ராவின் சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி. பிரபாகரன் இதனை கூறினார்.

கடந்தாண்டு மித்ராவின் வாயிலாக நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்திற்கு 7 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

சிறு குறு வணிகர்கள் வணிகம் மேற்கொள்வதற்கான அடிப்படை பொருட்கள் வாங்கி கொடுப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 125 வணிகர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கப்பட்டது. அதன் அறிமுக விழாவும் இன்று நடைபெற்றது.

இந்த திட்டம் வெற்றி கண்டால் வரும் காலத்தில் இன்னும் அதிகமான தொழில் முனைவர்களுக்கு உதவும் முயற்சிகளை மித்ரா மேற்கொள்ளும் என்று பிரபாகரன் கூறினார்.

கடந்த 2023ஆம் ஆண்டுக்கான மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பாலர் பள்ளிகளுக்கான நிதி, உயர் கல்விக் கூட மாணவர்களுக்கான நிதி, டயலிஸ்ட் ஆகிய திட்டங்கள் மக்களுக்கு பெரும் பயனாக இருந்தது.

ஆகவே இந்த திட்டங்களை இவ்வாண்டு மீண்டும் மித்ரா தொடரும். 

அதேவேளையில் பல புதிய திட்டங்களையும் மேற்கொள்வதற்கான முயற்சிகளை மித்ரா மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக இந்திய சமுதாயத்தின் சமூக நல உதவிகளுக்காக 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று பிரபாகரன் கூறினார்.

125 வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் தான் நெகிரி செம்பிலான் வர்த்தக சங்கத்திற்கு 7 ரிங்கிட் லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் இன்றைய அறிமுக விழாவிற்கு 350 க்கும் மேற்பட்ட வர்த்தர்கள் திரளாக வந்து உதவிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

ஆகவே வருங்காலத்தில் இந்த வர்த்தக சங்கத்திற்கு மித்ரா கூடுதலான நிதி ஒதுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அதன் தலைவர் திருநாவுக்கரசு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset