நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நைகல் கார்டனர் வீடு, புக்கிட் தாகார் சாலை பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது: டாக்டர் சத்தியபிரகாஷ்

கோல குபு பாரு:

நைகல் கார்டனர் வீடு, புக்கிட் தாகார் சாலை பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் இதனை கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு கீழ் உள்ள இந்த தோட்டப் பிரச்சினைகள் தொடர்ந்து இழுப்பறியாக இருந்து வருகிறது.

இந்த பிரச்சினையால் இந்திய சமுதாயத்தின் வாக்குகள் நம்பிக்கை கூட்டணிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதன் அடிப்படையில் கெஅடிலான் உச்சமன்றக் கூட்டத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.

அதே வேளையில் நேற்று நடைபெற்ற மாநில உச்சமன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக இப்பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கட்சிக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் கடந்த மாநில சட்டமன்ற தேர்தலின் போது மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லீ கீ இயோங் சார்பில் இந்த விவகாரம் தொடர்பில் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுவும் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆகவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என தாம் நம்புவதாக டாக்டர் சத்தியபிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset