நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் 12ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி மரணம்

ஜொகூர்பாரு:

ஜொகூரில் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 12ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயதுச் சிறுமி மாண்டார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணிக்கு நிகழ்ந்ததாக மாநிலக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுமியின் உயிரற்ற உடல் 6ஆவது மாடியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

பள்ளியில் இருந்து இன்னொரு பிள்ளையை அழைத்துவரச் சென்ற 32 வயதுப் பெண் சிறுமியை வீட்டில் தனியே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பூட்டப்படாத கதவைத் திறந்து சுவரில் ஏறி பின்னர் சிறுமி கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுப் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset