செய்திகள் மலேசியா
பாராங் கத்தி ஏந்திய கும்பலால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடவரின் சடலம் மீட்பு
காப்பார்:
பாராங் கத்தி ஏந்திய கும்பலால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதனை வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் உறுதிப்படுத்தினார்.
கிள்ளான், காப்பார் தாமான் ஜெயாவில் நடந்த இந்த சம்பவத்தில்,
பாராங் கத்தி ஏந்திய நான்கு நபர்களால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவரின் உடல் படுக்கையறையின் முன் கிடந்தது.
இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
38 வயதான மரணமடைந்த ஆடவரின் வீட்டிற்குள் நான்கு பேர் பாராங் கத்தியுடன் புகுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மற்றொரு சந்தேக நபர் அடையாளம் தெரியாத பதிவு எண் கொண்ட பெரோடுவா மைவி காரில் காத்திருந்தாக நம்பப்படுகிறது.
இந்த கொலைக்கான காரணம் என்னும் கண்டறியப்படவில்லை.
அதை வெளியே போலீசார் இந்த விவகாரம் குறித்து தொடர்பு விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm