நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எங்களின் வாக்கு வேண்டும் என்றால் எஸ்டியில் கையெழுத்திட வேண்டும் 5 தோட்ட பாட்டாளிகள் போர்க்கொடி

உலு சிலாங்கூர்: 

எங்களின் வாக்கு வேண்டும் என்றால் எஸ்டி ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.

கோல குபு பாரு தொகுதியைச் சேர்ந்த 5 தோட்ட பாட்டாளிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நைகல் கார்னடர், புக்கிட் தாகார், மேரி, மிஞ்சாக், சுங்கை திங்கி ஆகிய 5 தோட்டங்களில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கு பல வாக்குறுதிகள் வழங்கப்படுகிறது.

ஆனால் தேர்தலுக்கு பின் எந்தவொரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் ஒவ்வொரு நாங்கள் ஏமாற்றப்படுகிறோம்.

ஆகவே இம்முறை இங்குள்ள மக்களின் வாக்குகள் வேண்டும் என்றால் எஸ்டியில் கையெழுத்திட வேண்டும்.

மேலும் தேர்தலில் வெற்றி  பெறும் வேட்பாளர்கள் மக்களின் உரிமைக்காக போராட வேண்டும்.

மேம்பாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாகி விடக் கூடாது என்று அத்தோட்ட மக்களின் பிரதிநிதி வாசுதேவன் ராஜா மாணிக்கம் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset