நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு தேர்தல் விதி மீறலாக இருக்கலாம்: பெர்சே

கோலாலம்பூர்: 

கோல குபு பாருவில் நடைபெறும் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
தேர்தல் விதி மீறலாக இருக்கலாம்.

பெர்சே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு குழு இதனை தெரிவித்தது.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாளை கோல குபு பாருவில் மாபெரும் அளவில் ஒரு நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறவுள்ளது.

இந்த திறந்த இல்ல உபசரிப்பு தேர்தல் குற்றச் சட்டம் 1954ஐ மீறுவதாக பெர்சி எச்சரித்துள்ளது.

கோல குபு பாரு இடைத்தேர்தல் வேட்புமனுத் தினத்தன்று நடைபெறும் இந்த நிகழ்வில் விருந்து, 

ராயா பணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset