நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதினின் மறு ஆய்வு மனுவை ஐவர் கொண்ட நீதிபதி குழு விசாரிக்கும்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் மறு ஆய்வு மனுவை ஐந்து பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குழு விசாரிக்கும்.

இதனை அவரின் தலைமை வழக்கறிஞர் ஹிசாம் தே போ தெய்க் உறுதிப்படுத்தினார்.

ஜானா விபாவா திட்டத்தின் அதிகார துஷ்பிரயோக வழக்கில் விடுதலை  முடிவை திரும்பப் பெற டான்ஶ்ரீ மொஹைதின் யாசினின் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் விசாரிப்பார்கள்.

இன்று காலை நடைபெற்ற வழக்கு நிர்வாகத்தின் போது ஐந்து நீடிபதி குழு விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அபாங் இஸ்கந்தர் அபாங் ஹஷிம் இந்த அனுமதியை வழங்கினார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset