நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவசுதனுடன் சேர்ந்து வாழ மனைவி ஹர்சினி பினாங்கிலிருந்து தெலுக் இந்தானுக்கு வேலை மாறி வந்தார்

ஈப்போ:

சிவசுதனுடன் சேர்ந்து வாழ அவரின் மனைவி டாக்டர் ஹர்சினி பினாங்கிலிருந்து தெலுக் இந்தானுக்கு வேலை மாறி வந்தார்

இதனை பெயர் குறிப்பிட விரும்பாத குடும்ப உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த 10 பேரின் சிவசுதனும் அடங்குவார்.

இவருக்கும் டாக்டர் ஹர்சினிக்கும்  கடந்த ஜனவரி 21ஆம் தேதி திருமணமானது.

திருமணத்திற்கு பின் டாக்டர் ஹர்சினி பினாங்கில் வேலை செய்து வந்தார்.

அதன் பின் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பற்காக பினாங்கில் இருந்து தெலுக் இந்தானுக்கு அவர் வேலை மாறி வந்தார்.

தெலுக் இந்தான் லங்காப்பில் உள்ள கிளினிக்கில் என் பணியை இப்போது தான் தொடர்ந்தார்.

ஆனால் யாருக்காக டாக்டர் ஹர்சினி வேலை மாறி வந்தாரோ அவர் இன்று உயிருடன் இல்லை.

அவர்கள் என்றென்றும் பிரிந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset