செய்திகள் மலேசியா
கோர் மிங்கின் உதவியாளரை கோல குபு பாரு வேட்பாளராக அறிவித்தது நம்பிக்கை கூட்டணி
உலு சிலாங்கூர்:
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் பாங் சோக் தாவ் களமிறங்கவுள்ளார்.
இவர் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங்கின் உதவியாளர் ஆவார்.
கோல குபு பாருவில் உள்ள ஜசெக சேவை மையத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் இதனை அறிவித்தார்.
சிலாங்கூர் அம்பாங்கைச் சேர்ந்த 31 வயதான பாங், முன்மொழியப்பட்ட பல பெண் வேட்பாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
குறிப்பாக பெண், கல்வித் தகுதி, அரசியல், கட்சி அனுபவம் உள்ளவர் உட்பட பல நிபந்தனைகளை பூர்த்தி செய்து 10 வேட்பாளர்களின் பட்டியலில் இருந்து பாங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாங் இதற்கு முன்பு ஜசெகக்கு சொந்தமான உபா டிவியில் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.
இதனிடையே கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 2:26 pm
21 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am