நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

58 வயதில் மீண்டும் விளையாட்டாளராகும் ரொமாரியோ

ரியோ டி ஜெனிரோ:

பிரேசிலிய கால்பந்து சகாப்தம் ரொமாரியோ, தனது 58ஆவது வயதில் மீண்டும் விளையாட்டாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது பிரேசில்.

அந்த நாட்டு அணியில் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ரொமாரியோ. அதோடு, அவர் ஓர் அரசியல் தலைவரும் ஆவார்.

ரொமாரியோ கால்பந்திலிருந்து ஓய்வுபெற்று 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 

இப்போது தான் தலைவராக இருக்கும் பிரேசிலின் அமெரிக்கா எனும் குழுவுக்கு மீண்டும் விளையாட்டாளராகக் களமிறங்கப்போவதாக ரொமாரியோ அறிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset