நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மேட்ரிட் பொது டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் சபலென்கா, ரிபாகினா

மேட்ரிட் அனைத்துலகப் பொது டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகின்றது.

இந்தத் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியாட்டத்தில் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலையிலிருக்கும் பெலாருஸின் அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை மீரா ஆன்ட்ரிவாவை எதிர்கொண்டார். 

இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், உலகத் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கும் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, சக வீராங்கனையான யூலியா புதின்சேவாவுடன் மோதினார்.

இதில் ரிபாகினா 4-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோதுகிறார்.

மற்றொரு அரையிறுதியில் ஸ்வியாடெக், மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset