நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி தங்கும் விடுதியில் பயத்தில் அலறிய மாணவர்கள்: 165 மாணவர்களுக்கு 5 நாள் விடுமுறை

ஜெம்பூல்:

பத்து கிகிர் இடைநிலைப் பள்ளி  தங்கும் விடுதியில் கிட்டத்தட்ட 50 மாணவர்கள் பயத்தில் அலறியுள்ளனர்.

இதனால் அங்கு தங்கியிருந்த 165 மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அத்தங்கும் விடுதியில் தங்கியிருந்த 50 மாணவர்கள் பயத்தில் கத்தி அலறியுள்ளனர்.

13 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 19 ஆண்களும் 31 பெண் மாணவர்களும் இந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து 165 மாணவர்களும் தற்போது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி காலி செய்யப்பட்டுள்ளது.

இதனை ஜெம்பூல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷம்சூல்கஹார் முகமத் டெலி உறுதிப்படுத்தினார்.

முன்னதாக தங்கும் விடுதியில் மாணவி ஒருவர் கத்தி அலறும் குரல் பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset