நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் கட்சியின் உண்மையான போராட்டம் இப்போது தான் தொடங்கியுள்ளது:  டத்தோ ரமணன்

ஷாஆலம்:

கெஅடிலான் கட்சியின் உண்மையான போராட்டம்  இப்போது தான் தொடங்கியுள்ளது.

தொழில் முனைவோர் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் இதனை கூறினார்.

கெஅடிலான் கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

கடந்த 25 ஆண்டுகளில் பல போராட்டங்களை கெஅடிலான் கட்சி கடந்து வந்துள்ளது.

இந்த போராட்டங்களின் அடிப்படையில் டத்தோஶ்ரீ அன்வாருக்கு பிரதமர் என்ற உச்சக்கட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது.

மக்கள் தந்த அதிகாரத்தை நாம் தற்காக்க வேண்டும்.

ஆகையால் என்னை பொறுத்த வரையில் உண்மையான போராட்டம் இப்போது தான் தொடங்கியுள்ளது.

இந்தப் போராட்டம்தான் இந்தக் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.

மலேசியாவின் பொருளாதாரத்தை உலக ரீதியில் உயர்த்த வேண்டும். நாட்டில் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் உட்பட பல இலக்குகளை கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

பிரதமரின் இலக்குகளை நிறைவேற்றுவதே நமது பணியாக இருக்க வேண்டும்.

மேலும் மக்களின் ஆதரவுடன் பிரதமர் இன்னும் அதிகமான சீர்த்திருத்தங்களை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset