செய்திகள் மலேசியா
தெங்கு ஸப்ருலுக்கு வேறு பணிகள் உள்ளன: ஜாஹித்
உலுசிலாங்கூர்:
சிலாங்கூர் அம்னோ முன்னாள் பொருளாளர் தெங்கு ஸப்ருலுக்கு வேறு பணிகள் உள்ளன.
இதனால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார் என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
தெங்கு ஸப்ருல் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவொரு பெரிய விஷயமே இல்லை.
அதே வேளையில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களின் செயல் திறன்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.
அவ்வகையில் தெங்கு ஸப்ருலுக்கு வேறு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்னோ, தேசிய முன்னணி கட்டமைப்பிற்கு வெளியே அரசியல் ரீதியாக ஏதாவது வியூகம் வகுத்துச் செய்ய அவருக்கு மற்றொரு பணி கொடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்ட பணியை அவர் தொடர்வார் என்று ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm