செய்திகள் மலேசியா
மனைவிக்கு வைத்த குறி, மெய்க்காப்பாளரை தாக்கியது: KLIA விமான நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
சிப்பாங்:
மனைவிக்கு வைத்த குறி, மெய்க்காப்பாளரை தாக்கியதால் சம்பந்தப்பட்ட ஆடவர் காயமடைந்தார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் கேஎல்ஐஏ பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை 1.30 மணிக்கு உம்ரா யாத்ரீகர்கள் கேஎல்ஐஏவில் இருந்து திரும்பி வருவதற்காகக் காத்திருந்தனர்.
அப்போது அவரது மனைவி மீது சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்த காத்திருந்தார்.
சந்தேக நபர் இரண்டு முறை துப்பாக்கிச் சூட்டுகளை நடத்தியுள்ளார்.
அவற்றில் ஒன்று துப்பாக்கி குண்டு உள்ளூரைச் சேர்ந்த மெய்க்காப்பாளரை தாக்கியது.
இந்த சம்பவத்தில் மெய்காப்பாளர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மேலும் சந்தேக நபரை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
வடக்கே நோக்கி தப்பிச் சென்றதாகக் கருதப்படும் அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட விரோதமாகும். பயங்கரவாதச் செயல்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கேஎல்ஐஏவின் நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்பாக உள்ளது என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமார் கான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm