செய்திகள் மலேசியா
நமக்குள் இந்தியர் எனும் உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
புத்தாண்டு என்பது புதிய தொடக்கம் என்பது போல. அது சிறப்பாக அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம்.
அந்த வகையில் இந்த புத்தாண்டையும் மகிழ்ச்சியாக சிறந்ததொரு எதிர்காலத்தைக் குறிவைத்துக் கொண்டாடுவோம்.
இந்தியர்கள் நாம் பல்வேறு மொழிகளையும், பண்டிகைகளையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து வந்தாலும், நமக்குள் நாம் இந்தியர் எனும் உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நாம் ஒற்றுமையாக இருப்பதே நமக்குப் பலம்.
நம்மிடையே சிந்தனை மாற்றங்கள் தேவை. நம்மைச் சுற்றி நல்ல எண்ணங்களும், செயல்பாடுகளும் இருத்தல் அவசியம்.
நம் வாழ்வை செழிப்பாக நாம் முயற்சி செய்து கொண்டே இருப்போம்.
முயற்சி திருவினையாக்கும்ப்என்பது எந்நாளும் பொய்த்ததில்லை. வள்ளுவனின் கூற்றுப்படி,
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் - குறள் 619
ஒருவனின் முயற்சிக்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு இந்த புத்தாண்டில் காலடி வைப்பொம்.
மீண்டும் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இன்றைய பொழுது இனிய பொழுதாக மலரட்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm