செய்திகள் மலேசியா
158 தோட்டாக்களைக் கடத்தியதாகவும், 6 துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் இஸ்ரேலிய ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
கோலாலம்பூர்:
158 தோட்டாக்களை மலேசியாவிற்கு கடத்தியதாகவும், ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அவ்வாடவர் விசாரணை கோரியுள்ளார்.
துப்பாக்கி தோட்டாக்களை கடத்தியதற்காக துப்பாக்கி சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழும், துப்பாக்கிகளை வைத்திருந்ததாக துப்பாக்கிகள் சட்டம் 1971 இன் பிரிவு 7 (1), 8 இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இங்குள்ள ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இவ்விசாரணையை செவிமடுத்த நீதிபதி தஸ்மின் அபு பக்கர் அவிட்டனுக்கு ஜாமீன் வழங்கவில்லை.
மேலும் மே 21 ஆம் தேதி வழக்கு விசாரணை தொடரும் என நீதிபதி அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm