செய்திகள் மலேசியா
இஸ்ரேலிய ஆடவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்
கோலாலம்பூர்:
இஸ்ரேலிய ஆடவர் ஷாலோம் அவிட்டன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவதற்காக அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
38 வயதுடைய அந்த சந்தேகநபரை ஏற்றிச் சென்ற சுமார் ஆறு போலிஸ் வாகனங்களின் அணிவகுப்பு இரண்டு போக்குவரத்து போலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் மோட்டார் சைக்கிள்களுடன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.
போலீஸ் டிரக்கில் இருந்து கீழே இறக்கப்பட்டு கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அவர் நீதிமன்ற கட்டிடத்திற்குள் அழைத்து செல்லப்பட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm