செய்திகள் மலேசியா
கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு
ஜொகூர் பாரு:
கோத்தா திங்கி அருகிலுள்ள தஞ்சோங் பாலாவ் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன இளைஞர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.
25 வயதுடைய இளைஞர் காணாமல் போனது தொடர்பில் நேற்று காலை 10.15 மணியளவில் தனது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக கோத்தா திங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூசேன் ஜமோரா கூறினார்.
கோத்தா திங்கியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் முதல் அந்தக் கடற்கரையில் முகாமிட்டு இரவைக் கழித்துள்ளனர்.
நேற்று காலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த இளைஞர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று காலை 11.10 மணியளவில் அவரின் உடல் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைக்காக இளைஞரின் உடல் கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட இளைஞரின் உடல் அவர் காணாமல் போனதாக கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கை கமாண்டர் மூத்த தீயணைப்பு அதிகாரி பைசல் அஹம்மத் அறிக்கையில் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm