செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் மூன்றாம் வகுப்பு வார்டுக்கான வசதிகள் விரைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் மூன்றாம் வகுப்பு வார்டுக்குக்கான தேவையான வசதிகளை விரைவுபடுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைச் சுகாதார அமைச்சர் டிசுல்கிப்ளி அஹம்மத் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவார் என்று கூறினார்.
மூன்றாம் வகுப்பு வார்டு பகுதி சற்று அதிகமாக வெப்பமாக இருப்பதாகவும் அதிகமான மக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்துச் சுகாதார அமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தால் அதற்கு தேவையான வசதிகளை அரசு துரிதப்படுத்தும் என்று அவர் கூறினார்.
மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருப்பதை உறுதி செய்ய அமைச்சகமும் அரசாங்கமும் கவனம் செலுத்தும் என்று மூன்றாம் வகுப்பு வார்டுகளில் நோயாளிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மருந்து வாங்கும் முறை உட்பட, செலவு குறைந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது உட்பட, விரிவான ஆய்வுக்கு அழைப்பு விடுப்பதாக அன்வார் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm