நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூச்சிங்கில் உள்ள கேகே மார்ட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் 

கோலாலம்பூர்: 

கூச்சிங்கில் உள்ள கேகே சூப்பர்மார்ட் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நாட்டில் மீண்டும் அச்சத்தையும் பதற்றத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என்று நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில் கூச்சிங் நகரில் உள்ள கேகே மார்ட்டில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய ஆடவரைத் தேடி வருகின்றனர். 

போலீஸ் தங்களின் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து தரப்பும் பொறுமையும் அமைதியும் கொள்ள வேண்டும் என்று பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். 

அல்லாஹ் காலுறை விவகாரம் தொடர்பாக கேகே மார்ட்டிற்கு எதிராக மூன்றாவது சம்பவம் நடந்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset