நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைதான இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்; பல பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: சைபுடின்

லஹாட் டத்து:

கைதான இஸ்ரேலிய ஆடவர் விவகாரத்தில் பல பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

அண்மையில் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டலில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் ஆறு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல நபர்களுக்கு எதிராக போலிசார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

இது தொடர்பில் போலீசார் பல பெயர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அவரிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர்.

இப்போது இதில் சம்பந்தப்பட்ட பலரைக் கைது செய்வதாக போலிஸ் அறிவித்துள்ளது.

விசாரணையின் முடிவுகளுக்குப் பிறகு இதில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை போலிஸ் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஈஸ்ட் கோஸ்ட் சிறப்புப் பாதுகாப்பின் எஸ்காம் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி நேற்று இரவு நோன்பு திறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset