நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் திடலை உயர்தரமாக வைத்துக்கொள்ளுங்கள்

கோலாலம்பூர்: 

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் திடலை உயர்தரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உதாரணமாக லண்டன் வெம்லி அரங்கின் திடலை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாட்டின் முன்னாள் அனைத்துலக காற்பந்தாட்ட வீரர் ஸ்டேன்லி பெர்னார்ட் வலியுறுத்தினார். 

இங்கிலாந்து லண்டனில் அமைந்திருக்கும் வெம்லி அரங்கின் திடல் இதுநாள் வரை எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை. அந்த அரங்கின் திடலானது உயர்தரமான அளவில் இருப்பதாக கே. எல் சிட்டி அணியின் தலைமை நிர்வாகி அதிகாரியுமான அவர் கூறினார். 

மலேசியாவின் தலைசிறந்த அடையாளங்களில் ஒன்றாக திகழும் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் திடல் எப்போதும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதனை மலேசிய ஸ்டேடியம் குழுமம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் திடல் மோசமான சூழலில் இருந்த நிலையில் அனைவரின் பேசுப்பொருளாக மாறியது. திடலின் நிலையும் அதன் பராமரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள இடர்களைச் சமாளிக்க இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு முனைப்பு காட்டியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset