நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இலங்கையில் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்

கொழும்பு:

மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை இம்முறை மகளிர் பிரீமியர் கிண்ணத் தொடரின் (Women’s Premier Cup – 2024) அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகிய மலேசியா, தாய்லாந்து, நேபாளம், ஐக்கிய அரபு அமீரக அணிகள் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் T20 போட்டிகளாக இந்த ஆண்டும் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரானது ஜூலை மாதம் 17ஆம் தேதி தொடக்கம் 28ஆம் தேதி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இம்முறை தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கெடுக்கவிருப்பதோடு, 8 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset