நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு பாலத்தில் கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்தலாம்: பிளஸ் நிறுவனம் 

பினாங்கு:

பினாங்கு பாலத்தில் கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்தும் சோதனை முறையை அமல்படுத்தியுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை நிறுவனம், பிளஸ் தெரிவித்துள்ளது. 

இந்தச் சோதனை செயல்முறை மார்ச் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

டெபிட் , கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் சிறப்பு பாதைகளைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று பிளஸ் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

டோல் கட்டணம் அவர்களின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு இருப்பில் இருந்து கழிக்கப்படும். 

பணம் செலுத்துவதற்கு வங்கி அட்டைகளைப் பதிவு செய்யும் பினாங்கு குடிமக்களுக்கு 20 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுவதாக பிளஸ் தெரிவித்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset