செய்திகள் மலேசியா
மிடல்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா
ரோம்பின்:
மிடல்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா அடுத்த மாதம் 13-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்துப் பழைய இனிய நினைவுகளை மீட்டெடுப்பது புதிய தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஒன்று கூடும் விழா நடத்தப்படவுள்ளது.
மேலும், முன்னாள் மாணவர்கள் பள்ளியில் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு உதவிகள் வழங்குவது,பள்ளி மேம்பாட்டிற்காக உபகரணங்கள் வழங்குவது, பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்வது போன்ற மாணவர்களின் நலன்களுக்காக இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
கூடுதலாக, இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியைச் செலவு போக முழுமையாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு.சிவபாலன் தெரிவித்துள்ளார்.
எனவே, முன்னாள் மாணவர்கள் அனைவரும் இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீங்காத நினைவுகளை உருவாக்குவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சிவபாலன் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சி குறித்து மேல் விபரங்களுக்கு
திரு. ஜெயகுமார் (019-2778479)
திரு. செல்வேந்திரன் (016-7714517)
திரு சிவபாலன் (0193272143)
திரு. அச்சுதன் (016-2439761)
ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm