நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெண்கள் பிரீமியர் லீக் ; பட்டத்தை வென்றது சாதனை படைத்த பெங்களூரு அணி

புதுடெல்லி:

கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் பெண்கள் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண்ஜெட்லி அரங்கில் நடைபெற்றது. 

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீராங்கனைகள் மெக் லானிங் , ஷாபாலி வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஷாபாலி வர்மா 23 ரன்களில் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து வந்த ,ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி வீராங்கனைகளும் பெங்களூரு அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

இதனால் 18.3ஓவர்கள் முடிவில் 113ரன்களுக்கு டெல்லி அணி ஆட்டமிழந்தது . பெங்களூரு அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட் , மோலினக்ஸ் 3 விக்கெட் , ஆஷா சோபனா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.

தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா , சோபி டெவின் இருவரும் அதிரடி காட்டினர். நிலைத்து ஆடி பந்துகளைப் பவுண்டரிக்கு பறக்க விட்டனர் .

இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், சோபி டெவின் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் ஸ்மிருதி மந்தனா 31 ரன்களுக்கு வெளியேறினார்.தொடர்ந்து ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரி இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் 3 பந்துகளில் பெங்களூரு அணி இலக்கை எட்டியது.

இறுதியில் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்தது.

இதனால் 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுப் பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset