நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

RCB அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியா திரும்பினார் 

மும்பை: 

நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ளார்.  நரை தாடியுடன் புதிய ஸ்டைலில் கோலி வந்திறங்கிய வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 

கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். 

தொடர்ந்து ஜனவரி மாதம் லண்டன் சென்ற அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் தெரிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்றிரவு இந்தியா திரும்பியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆர்சிபி அணியுடன் விராட் கோலி இன்று அல்லது நாளை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாமடைந்துள்ளனர்.

இதனிடையே ஆர்சிபி அணியின் 'அன்பாக்ஸ்' நிகழ்ச்சி பெங்களூரில் மார்ச் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்விலும் விராட் கோலி பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset